திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த முதல்வர் நாராயணசாமியை காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சு.கு.சந்திரசேகரன், மாவட்ட விவசாய அணிச்செயலர் வேல் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலர் க.சு.ஜெயந்திநாதன், மாவட்ட துணைத்தலைவர் நா.லோகநாதன், வட்டாரச் செயலர் சேதுராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, அவர் தரிசனம் செய்தார்.