திருச்செந்தூர் அமலிநகரில் புதிய சந்தியாகப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையோரம் அமைந்துள்ள பழமையான புனித சந்தியாகப்பர் ஆலயம், ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
இதைமுன்னிட்டு புதிய சந்தியாகப்பர் சொரூபமானது, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வரப்பட்டது. பின்னர் நடைபெற்ற விழாவுக்கு, அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர்பால் தலைமை வகித்து, அர்ச்சிப்பு செய்தார். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அசன விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன் பர்னாந்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.