கீதாஜீவன் கல்லூரியில் ராகிங் தடுப்புக் கருத்தரங்கு

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் எஸ். மலர்கொடி தலைமை வகித்தார். பேராசிரியர் மு. திலீபன்குமார் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் எம். சிவலிங்க சேகர் பங்கேற்று, ராகிங் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். 
கருத்தரங்கில், மாணவர்கள் ஆளுமை பண்புகளை வளர்த்து கொள்வது, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் கிடைக்கும் உயர்வு, சிறப்புகள், ராகிங் குற்றங்களுக்கான தண்டனைகள், அடிப்படை உரிமைகள், சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com