திருச்செந்தூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எம். சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் மாதந்தோறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் திருச்செந்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 6) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 13 ஆம் தேதி, கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 20 ஆம் தேதி, தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 27 ஆம் தேதியும் இக் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.