பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நல உதவிகள்

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவி

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவி, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. 
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு  பட்டதாரி பிரிவு மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மதி,  ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்கத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சந்திரன், வைரவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து, ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவி, கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மதி, தொழிலதிபர் அமிர்தராஜ் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்,  கட்சி நிர்வாகிகள் பிரேம்குமார், உமாசங்கர், ஜோசுவா, நல்லமதி, மணிகண்டன், சுரேஷ்பாண்டியன், கொம்பையா, துரைராஜ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  வட்டாரத் தலைவர் பிச்சைக்கனி வரவேற்றார். ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com