ஆறுமுகனேரி அருகே உள்ள கீரனூர் மாவு இசக்கியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அம்மன் அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றன. நள்ளிரவு சிறப்பு பூஜைக்குப் பின்னர், புதன்கிழமை காலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.