கோவில்பட்டி பகுதியில் ஆகஸ்ட் 17 மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை(ஆக. 17) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை(ஆக. 17) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, முகமதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, எம்.துரைச்சாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி, சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பிற்பகல் 1 முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலங்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம், சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், ஆத்திகுளம், தெற்கு மற்றும் வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒருபகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின் தொடர் 1, 2 ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com