செய்துங்கநல்லூரில் சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது.
இதையொட்டி முதல்நாள் பீமா தைக்கா தெருவில் இருந்து அரண்மனை கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து சந்தை பக்கீர்மஸ்தான் சாகீப் தர்காவில் விளக்கு ராத்திரி நடைபெற்றது. தப்பருக் என்னும் நேர்ச்சை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.