தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.16) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ஆவது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது சுய விவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன் கலந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.