ஆறுமுகனேரியில் அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாரதனை, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மேலும், பைரவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.