நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, மனிதச் சங்கிலி நடைபெற்றது.
இப்பேரணிக்கு நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் மணி தலைமை வகித்தார். 9 தமிழ்நாடு சைகை அணியின் சுபேதார்கள் பாபு, சூரிய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பள்ளித் தலைமையாசிரிய ர் ஆல்பர்ட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நாசரேத் சந்திப்பு முதல் புனித லூக்கா மருத்துவமனை வரை மாணவர்கள் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதையடுத்து, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றியவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. பள்ளியின் தேசிய மாணவர் படை அதிகாரி ஜெயசீலன் சேகர் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.