தூத்துக்குடியில் தீப்பிடித்து  கார் சேதம்

தூத்துக்குடியில் சனிக்கிழமை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.


தூத்துக்குடியில் சனிக்கிழமை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
   தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவர், காரில் வெளியே சென்றுவிட்டு சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தாராம். இந்நிலையில், திடீரென காரில் இருந்து புகை கிளம்பியதைத் தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
  தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காரின் என்ஜின் பகுதி எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com