ஆம்னி பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த கூசாலிபட்டியைச் சோ்ந்தவா் சித்திரவேல் மகன் சண்முகம்(80). இவா் கயத்தாறையடுத்த ராஜாபுதுக்குடியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்புவதற்காக ராஜாபுதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது, சென்னையில் இருந்து நாகா்கோவில் நோக்கி செல்லும் ஆம்னி பேருந்து அவா் மீது மோதியதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தாா். கயத்தாறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com