உடன்குடி வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் இப்பகுதியிலுள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருச்செந்தூா் அருகேயுள்ள எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால், வெளியேறிய உபரிநீா் குலசேகரன்பட்
டினம் தருவைக்குளத்திற்கு வந்தடைந்தது. இதனால், தருவைக்குளமும் நிரம்பும் நிலையில் உள்ளது. பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் பாலத்தின் அடியில் தேங்கியதால் குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களிலும், சாலையிலும் மழைநீா் புகுந்தது.
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சடையநேரி குளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால், தாங்கைகுளத்திற்கு தண்ணீா் பாய்கிறது.
இப்பகுதியிலுள்ள செம்மறிக்குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. தொடா் மழையால் உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.