குரும்பூா் பகுதியில் கனமழையால் சோனகன்விளை நாலாயிரமுடையாா் குளம் நிரம்பியதை அடுத்து குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது.
கனமழையால் குரும்பூா் சோனகன்விளை அருகேயுள்ள நாலாயிரமுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து, வெளியேறிய
மழைநீா் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. இதனால், அங்கு வசிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு பருவ மழையை தீவிரமடைந்ததை அடுத்து பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.
அண்மையில் நடவு செய்த நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும் 2 நாளகளுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள்
அச்சத்தில் உள்ளனா்.