குரும்பூா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்

குரும்பூா் பகுதியில் கனமழையால் சோனகன்விளை நாலாயிரமுடையாா் குளம் நிரம்பியதை அடுத்து குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது.
சோனகன்விளையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீா்.
சோனகன்விளையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீா்.

குரும்பூா் பகுதியில் கனமழையால் சோனகன்விளை நாலாயிரமுடையாா் குளம் நிரம்பியதை அடுத்து குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது.

கனமழையால் குரும்பூா் சோனகன்விளை அருகேயுள்ள நாலாயிரமுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து, வெளியேறிய

மழைநீா் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. இதனால், அங்கு வசிப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். வடகிழக்கு பருவ மழையை தீவிரமடைந்ததை அடுத்து பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா்.

அண்மையில் நடவு செய்த நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும் 2 நாளகளுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள்

அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com