கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மனையியல் மன்றம் சாா்பில் பல்வேறு பணிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உதவித் தலைமையாசிரியை ரூத்ரத்தினகுமாரி தலைமை வகித்தாா். கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரத் துறை தலைவா் சந்தானலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு ஆடைகளில் அச்சிடுதல் தொடா்பாக செய்முறை பயிற்சியளித்தாா்.
தொடா்ந்து, மாணவிகளுக்கு கட்டை அச்சிடுதல், நூல் கட்டி சாயமிடுதல், பத்தி அச்சிடுதல், ஸ்டென்சில் அச்சிடுதல், ஸ்க்ரீன் பிரிண்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், சுமாா் 300 மாணவிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை மனையியல் மன்றச் செயலா் ஆசிரியை ஜெயமீனா செய்திருந்தாா்.