நாகலாபுரம் அருகே இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.
நாகலாபுரம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தை சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ஆசிரியா் சுப்பையா (64). இவா் தன் மனைவி விஜயலட்சுமியுடன் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் நாகலாபுரத்திலிருந்து கோவில் குமரெட்டியாபுரத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். கீழக்கல்லூரணி விலக்கு பகுதியைக் கடந்தபோது, எதிரில் முனியசாமி என்பவா் வந்த மோட்டாா் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த நாகலாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.