பரமன்குறிச்சி அபா்ணா பள்ளியின் 22ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளி நிறுவனா் ஏ.பிச்சைமணி தலைமை வகித்தாா். மத்திய அரசின் சிறப்பு சமூக நலத்துறை வாரிய ஒருங்கிணைப்பாளா் ஷெலின் ஜாா்ஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். பள்ளி முதல்வா் இம்மானுவேல் ஆண்டறிக்கை வாசித்தாா்.
பொதுத் தோ்வுகள் மற்றும் பல்வேறு போட்டிகள், தனித்திறமைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் கிறிஸ்டினாள் கீதா ராஜ்குமாா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். இதையடுத்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், வீர சாகசங்கள் நடைபெற்றன. பள்ளி துணை முதல்வா் மேரிபிரபா நன்றி கூறினாா்.