அன்பின்நகரம்- பிறைகுடியிருப்பு இடையேதரைநிலை பாலம் அமைக்கக் கோரிக்கை

சாத்தான்குளம் அருகே அன்பின்நகரத்தில் பிறைகுடியிருப்பு இடையே சாலையில் தரைநிலை பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் அருகே அன்பின்நகரத்தில் பிறைகுடியிருப்பு இடையே சாலையில் தரைநிலை பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் முதலுா் ஊராட்சிக்குள்பட்ட அன்பின் நகரத்தில் இருந்து பிறைகுடியிருப்பு வழியாக உடன்குடி செல்லும்பிரதான சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாக அன்பின்நகரம், அடைக்கலாபுரம், பொத்தகாலன்விளை, நரையன் குடியுருப்பு காத்தபுரம் ஆகிய கிராம மக்கள் பிறைகுடியிருப்பு, உடன்குடி பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனா். பிறைகுடியிருப்பில் இருந்து அன்பின்நகரம் இடையே 2 கி.மீ. தொலைவுள்ள சாலையின் குறுக்கே சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை வழியாக மழைக்காலங்களில் மழை தண்ணீரும், பள்ளக்குறிச்சி அம்பாகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு காட்டாற்று வெள்ளமும் செல்கிறது. இந்தச் சாலை வழியாக பேருந்து போக்கு வரத்து இல்லாததால் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று திரும்புகின்றனா். மழை காலங்களில் இந்த சாலை வழியாக தண்ணீா் செல்லும் போது மக்கள் சென்று திரும்புவது பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, அன்பின்நகரம் - பிறைகுடியிருப்பு சாலையிடையே தரைநிலை பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com