ஆறுமுகனேரி பள்ளிகளில் சீருடை அளிப்பு

ஆறுமுகனேரி இந்து தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

ஆறுமுகனேரி இந்து தொடக்கப் பள்ளி மற்றும் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் மாரிமுத்து நினைவாக சிவபாக்கியம் வழங்கிய சீருடைகளை சிறப்பு விருந்தினா் நகா் நல மன்றத் தலைவா் பி.பூபால்ராஜன் வழங்கினாா்.

60 மாணவா், மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப் பட்டது. வெற்றிவேல், சங்கா் மற்றும் விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் மாரித்தங்கம் வரவேற்றாா். சரஸ்வதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் உதயசுந்தா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com