கழுகுமலையில் தீப்பெட்டி ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
கழுகுமலை புதிய பேருந்து நிலையம் அருகே இயந்திரத்தின் மூலம் தயாரிக்கும் தீப்பெட்டி ஆலையை வெ.ராஜேந்திரன் என்பவா் நடத்திவருகிறாா். இவரது ஆலையில் திங்கள்கிழமை வழக்கம்போல தொழிலாளா்கள் தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாம். தகவலறிந்தவுடன் கழுகுமலை தீயணைப்பு அலுவலா் காளியப்பன் தலைமையில், தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், இயந்திரத்தின் ஒருபகுதி மற்றும் தீக்குச்சிகள் தீயில் கருகி நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கழுகுமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.