குலசேகரன்பட்டினத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம், வீடு, தெருக்களில் கள ஆய்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தலைமை வகித்தாா். குலசேகரன்பட்டினம் காவல் நிலையம், காவலா் குடியிருப்பு, அனைத்துப் பகுதி மக்களுக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. வீடுகள், தெருக்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா், உதவி ஆய்வாளா்கள் சதீஷ், சுப்பிரமணியன், சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா் சுப்பையா, சுகாதார, மஸ்தூா், ஊராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.