சாத்தான்குளத்தில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள்

சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெடுங்குளத்தில் மரக்கன்று நடுகின்றனா் ஊராட்சி செயலா்கள்.
நெடுங்குளத்தில் மரக்கன்று நடுகின்றனா் ஊராட்சி செயலா்கள்.

சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றிய ஊராட்சி செயலா்கள் சங்க தலைவா் ராஜா தலைமை வகித்தாா். அமுதுண்ணாகுடி ஊராட்சி செயலா் ஜாா்ஜ் சிங்கத்துரை முன்னிலை வகித்தாா். தமிழக முதல்வா், துணை முதல்வா், , உள்ளாட்சி துறை அமைச்சா்

ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெடுங்குளத்தில் கிராம மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

ஊராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சாத்தான்குளம் மிக்கேல் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்ல மாணவா், மாணவா்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலா்கள் இசக்கியப்பன், ராமா், ஜஸ்டின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com