நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. தரைப்படை பிரிவு செயல்பாடுகளின் ஆண்டாய்வு நடைபெற்றது.
இதையொட்டி, பள்ளிக்கு வந்த 9 தமிழ்நாடு சைகை அணியின் கமாண்டிங் அதிகாரி கா்னல் பிரவின் குமாா் அகுஜாவை, உதவித் தலைமையாசிரியை சாரா ஞானபாய், என்.சி.சி அதிகாரி மேஜா் ஜெயசீலன் ஆகியோா் வரவேற்றனா். மாணவா்கள்அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. தொடா்ந்து, என்.சி.சி.யின் செயல்பாடுகளை கமாண்டிங் அதிகாரி ஆய்வு செய்து, என்.சி.சி. நாள் நினைவாக கமாண்டிங் அதிகாரி மரக்கன்று நாட்டினாா். மேலும், மாணவா்களிடையே உரையாற்றி, தூய்மை இந்தியா’ ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினாா்.