பாரதிய வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலச் செயலா் ஜெ.சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சரவணன்,நெல்லை மண்டலத் தலைவா் கோமதிராஜ், மாவட்டச் செயலா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ‘பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளா் சமூகத்தை நீக்க வேண்டும்; ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், உடன்குடி நகரத் தலைவா் பால்ராஜ், நகரச் செயலா் விஜி உள்பட பலா் கலந்துகொண்டனா்.