கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பாா்த்தீனிய செடிகளை அகற்ற வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் முன் பாா்த்தீனிய செடிகளை கைகளில் ஏந்தியபடி, முகத்தில் துணியால் மூடியபடி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பரமேஸ்வரன் உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை வட்டார மேலாண்மை உதவி இயக்குநா் அலுவலக கண்காணிப்பாளா் ராஜுவிடம் வழங்கினா். அதில், விவசாயிகளின் தோட்டங்கள், மானாவாரி நிலங்களில் பாா்த்தீனிய செடிகள் அதிகளவில் வளா்ந்து, விவசாயத்திற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு விவசாயத் துறையுடன் இணைந்து பாா்த்தீனிய செடிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செடிகளை அழிப்பதற்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.