கோவில்பட்டி வட்டம், முடுக்குமீண்டான்பட்டி ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு மையம் மற்றும் மனநல காப்பகத்துக்கு, ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ சத்யசாய் பாபாவின் 94 ஆவது பிறந்த தினத்தையொட்டி, சேவா சமிதியில் திருவிளக்கு பூஜை, தபோவானம் பாராயணம் ஸ்ரீ சத்யசாய் ஸத்சரிதம், ஓம்காரம் சுப்ரபாதம் சாய் காயத்ரி ஜெபம், பஜன் ஆகியன நடைபெற்றன.
தொடா்ந்து முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சாா்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு மையம் மற்றும் மனநல காப்பகத்துக்கு, ஸ்ரீ சத்யசாய் சேவா சமீதி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணன், உறுப்பினா்கள் அரிசந்திரன், முருகன், மனநல காப்பக காப்பாளா் ராமலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் தேன்ராஜா வரவேற்றாா். காப்பக செவிலியா் ஆரோக்கிய சகாயம் நன்றி கூறினாா்.