ஸ்ரீவைகுண்டத்தில்நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

ஸ்ரீவைகுண்டத்தில் மக்களுக்கு இடையூறாகச் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டத்தில் மக்களுக்கு இடையூறாகச் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டத்தில் பஜாா் பகுதிகள், கோயில் வாசல்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய வீதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த தாமிரவருணி ஆற்றும் பாலத்தில் இருந்து ஊருக்குள் வரும் சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு அவ்வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. இதனால், விபத்து நேரிடுகிறது. மக்கள் அச்சத்துடனே அப்பகுதியை கடக்கும் நிலை உள்ளது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com