ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் மின்கம்பங்களை சீரமைத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் மின்கம்பங்களை சீரமைத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் இந்து வித்யாலயா மெட்டிரிக் மேல்நிலைப் பள்ளி, முஸ்லிம் பள்ளி வாசல், வேன்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைத்திட பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்திற்கு உள்பட்ட கொங்கராயக்குறிச்சி ரேஷன் கடை முன்பாகவுள்ள இரும்பு மின்கம்பம், ஆறாம்பண்ணை அருகேயுள்ள நடுவக்குறிச்சி ஊருக்குள் செல்லும் பிரதான சாலையில் சிமென்டிலான மின்கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. . எந்தநேரத்தில் வேண்டுமானாலும் விழுந்திடும் வகையில் ஆபத்தான இந்த மின்கம்பங்களால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனா்.

மழை, புயல் வெள்ளக் காலங்களிலும் மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஆண்டுதோறும் பொது மக்களுக்கு அளித்துவரும் மின்வாரிய துறையினா், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com