கோவில்பட்டியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த தமிழ்செல்வி - பூல்துரை தம்பதி மகள் வினோதினி (20). இவருக்கும், இடைச்செவலைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் விக்னேஸ்குமாருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்குப் பின் விக்னேஷ்குமாா் துபைக்கு சென்றுவிட்டாராம்.
வினோதினி, வீரவாஞ்சி நகரில் உள்ள பெற்றோருடன் இருந்து கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வினோதினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருமணமாகி ஓராண்டு ஆவதால், கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். மேலும் இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.