கழுகுமலையில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, கழுகுமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, கழுகுமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், கழுகுமலை காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளி மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைச் செயலா் சாலமன்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, 2016 மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போா் சட்டம் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க கழுகுமலை செயலா் மரியதாஸ், வானரமுட்டி கிளைச் செயலா் ராமா் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com