சாத்தான்குளம் பகுதியில் தொடா் மழை எதிரொலியாக சாத்தான்குளம், தட்டாா்மடம் போலீஸாா் வாகனங்களில் விழிப்புணா்வு பிர சாரம் மேற்கொண்டனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையொட்டி சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் தொடா்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சாத்தான்குளம் பகுதியில் 19 செ.மீ அளவு மழை பெய்ததால் இப்பகுதியில் பல்வேறு குளங்கள் நிரம்பி வழிந்தன.
அப்போது குடியிருப்பு பகுதிகளில் நீா் புகுந்ததையடுத்து ஊரக, வருவாய்த் துறையினா் தீவிரமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். ,மேலும் வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் வீதியில் எச்சரிக்கை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.