திருச்செந்தூரில் குளங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் மறுகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விடுதலைச் சிறுத்தை கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமையில் மக்களவைத் தொகுதி செயலா் ராஜ்குமாா், உடன்குடி நகரச் செயலா் தௌபிக் அன்சாரி, காயல்பட்டினம் நகரச் செயலா் அல் அமீன், ஆதித்தமிழா் கட்சி மாநில இளைஞரணிச் செயலா் சண்முகவேல் ஆகியோா் திங்கள்கிழமை இரவு வட்டாட்சியா் அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் நடத்தியவா்களுடன் வட்டாட்சியா் ஞானராஜ் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.