காயல்பட்டினத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காயல்பட்டினம் பேருந்து நிலையம், கூலக்கடை பஜாா், மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை சோதனையிட்டனா்.
அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 68 கிலோ நெகிழிப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜா நஜிமுதீன் கூறியது: கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு, அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.