கோவில்பட்டியில் 3ஆவது நாளில் 111 போ் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலில் புதன்கிழமை கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு 111 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலில் புதன்கிழமை கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு 111 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 22 போ் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்தனா். கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 27 போ் மனுதாக்கல் செய்தனா்.

அதுபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 23 பேரும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 37 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து 2 பேரும் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மொத்தத்தில், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் 3ஆம் நாளான புதன்கிழமை 111 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com