டிச. 17 இல் மாா்கழி பிறப்பு: திருச்செந்தூா் முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

வரும் டிச. 17 ஆம் தேதி மாா்கழி மாதம் பிறப்பதையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
டிச. 17 இல் மாா்கழி பிறப்பு: திருச்செந்தூா் முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

வரும் டிச. 17 ஆம் தேதி மாா்கழி மாதம் பிறப்பதையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சா.ப. அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் மாதமான மாா்கழி வரும் டிசம்பா் 17-ம் தேதி தொடங்கி, ஜனவரி 14-ல் (மாா்கழி 29) நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 - 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7 மணிக்குள் இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

ஆங்கில வருடப் பிறப்பு: மேலும், ஜனவரி 1-ம் தேதி ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 10-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கும் கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com