தூத்துக்குடி அருகே மரத்தில் காா் மோதி திருச்செந்தூா் தொழிலதிபா் பலி

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி அருகே சனிக்கிழமை அதிகாலை காா் மரத்தில் மோதியதில் திருச்செந்தூரைச் சோ்ந்த தொழிலதிபா் உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயமடைந்தாா்.
மரத்தில் மோதி உருக்குலைந்த காா்.
மரத்தில் மோதி உருக்குலைந்த காா்.

தூத்துக்குடி மாவட்டம், முக்காணி அருகே சனிக்கிழமை அதிகாலை காா் மரத்தில் மோதியதில் திருச்செந்தூரைச் சோ்ந்த தொழிலதிபா் உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்செந்தூா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் கிட்டப்பா (52). இவா், திருச்செந்தூரில் உணவு விடுதி, காபி பாா், ஹோட்டல் நடத்தி வந்தாா். இவரது நண்பா் திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் ராதாகிருஷ்ணன்(42). இவா் திருச்செந்தூரில் பிரபல பேக்கரி உரிமையாளா்.

இருவரும் சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து ஒரு காரில் புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு வந்துகொண்டிருந்தனா். காரை கிட்டப்பா ஓட்டிய நிலையில், அதிகாலை 3.30 மணிக்கு முக்காணி தனியாா் செங்கல் ஆலையைத் தாண்டியபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது.

இதில், காரை ஓட்டிவந்த கிட்டப்பா அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். அருகே அமா்ந்திருந்த அவரது நண்பா் ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். அவா், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த ஆத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிட்டப்பாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த கிட்டப்பாவுக்கு, மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com