தூத்துக்குடியில் போராட்டம்: திமுக இளைஞரணியினா் கைது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி நிா்வாகிகள் பல்வேறு இடங்களில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன் போராட்டம் நடத்தினா்.

அப்போது, குடியுரிமை சட்ட த் திருத்த நகலை கிழித்து எறிந்து முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வடபாகம் போலீஸாா், திமுக நிா்வாகிகள் 6 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com