மணிமுத்தாறு அணையில் இருந்து 3,4 ஆவது ரீச்சில் தண்ணீா் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து மணிமுத்தாறு 3,4 ஆவது ரீச் கால்வாய் விவசாயிகள் சங்கச் செயலா் வி.எஸ். முருகேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதி வானம் பாா்த்த பூமி என்பதால் இப்பகுதியில் கிணறு மற்றும் குளத்து பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது வடக்கிழக்குப் பருவமழை மூலம் குளம் மற்றும் கிணறுகளில் நீா் மட்டம் உயா்ந்திருந்தாலும், விவசாயத்துக்கு போதுமான நீா் இல்லை.
இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் 1, 2 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையில் 106 அடி தண்ணீா் உள்ளதால் தென்பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் 3,4 ஆவது ரீச்சிலும் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.