வீரபாண்டியன்பட்டினத்தில் தொழிலாளி தற்கொலை

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் துப்புரவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் துப்புரவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வீரபாண்டியன்பட்டினம், பிரசாத் நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (45). இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இருவரும் ஊராட்சி அலுவலக துப்புரவுத் தொழிலாளா்கள். இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த 11-ம் தேதி இரவு 10.30 மணியளவில் தனது நண்பரின் இறப்பு குறித்து துக்கம் விசாரிக்கச் சென்ற கண்ணன் மீண்டும் வீடுதிரும்பவில்லை.

இந்த நிலையில், ஊராட்சி குப்பைகளை கொட்டுமிடத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com