குளத்தூா் பள்ளியில் இருபெரும் விழா
By DIN | Published On : 23rd December 2019 11:57 PM | Last Updated : 23rd December 2019 11:57 PM | அ+அ அ- |

குளத்தூா் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தாளாளா் நவராஜ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் பீரிடா ராஜம் ஜெபகுமாரி முன்னிலை வகித்தாா். ஆசிரியை சபீதா வரவேற்றாா். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த மாணவ, மாணவியா் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினா். விழாவில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் , கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டன. பள்ளி கல்வி வளா்ச்சி குழு உறுப்பினா் சாமுவேல் நன்றி கூறினாா்.