கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல்துறை மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வர் தீபா தலைமை வகித்தார். திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி துணைஇயக்குநர் சி.பாண்டியம்மாள், பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து, சிவகாசி எஸ்.அப்.ஆர். மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியை உமாசங்கரி "கல்வி மூலம் மதிப்பீடு பெறுதல்' என்ற தலைப்பில் பேசினார். மாணவர், மாணவிகளுக்கான கட்டுரை, விளம்பர கேளிக்கை, ஊமை நாடகம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு துணைஇயக்குநர் பரிசுகள் வழங்கினார். துறைத் தலைவர் முகம்மது வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் நன்றி கூறினார்.