திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடுதிரை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வழக்காடிகள், பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை கணிணி சேவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சேவையை மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா தொடங்கி வைத்து பேசியது; திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள தொடுதிரை சேவை மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளின் நிலவரத்தை உடனடியாக வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். மேலும் வழக்காடிகள் பெயர், எண் மற்றும் வழக்குரைஞர்களின் பெயர்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் வைத்து அந்த வழக்கு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல், வழக்கின் தற்போதைய நிலை மற்றும் வழக்கு நடைபெறும் தேதி போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். வழக்கு பட்டியல் எதற்காக நிலுவையில் உள்ளது என்பது போன்ற விவரங்களை உடனடியாக இந்த தொடுதிரை கணினி மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார், வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் ஆல்பர்ட்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.