தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை  அருகே ராமசந்திரபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் உமையொருபாகம் (53). சென்னை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவர்,  கடந்த 8 ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்த அவர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புதுக்கோட்டை போலீஸார் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும்,  வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com