தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை அருகே ராமசந்திரபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் உமையொருபாகம் (53). சென்னை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 8 ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்த அவர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புதுக்கோட்டை போலீஸார் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.