பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

உடன்குடி அருகே செட்டிவிளை சிதம்பரபுரம் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தடம் எண் 15 என்ற பேருந்தை

உடன்குடி அருகே செட்டிவிளை சிதம்பரபுரம் வழியாக இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட தடம் எண் 15 என்ற பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி, இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி சார்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் ச.கேசவன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் இசக்கிமுத்து, முத்துராமன், முத்துகிருஷ்ணன், சண்முகவேல், இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் இசக்கியம்மாள், பேச்சியம்மாள், ரஞ்சிதம், கலைச்செல்வி, அன்னக்கிளி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com