முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
பாட்டக்கரை பத்திரகாளியம்மன் கோயிலிலில் 4508 திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 28th February 2019 06:17 AM | Last Updated : 28th February 2019 06:17 AM | அ+அ அ- |

குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலிலில் 4508 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை சந்திரம்மா தொடங்கிவைத்தார்.
பூஜையில், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், குரும்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கோயில் தர்மகத்தா ஜெயராகவன், விஜயராகவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.