எம்.கல்லத்திக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்

தமிழ்நாடு கால்நடை பராமாரிப்புத் துறை, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம், நாலுமாவடி புதுவாழ்வுச்

தமிழ்நாடு கால்நடை பராமாரிப்புத் துறை, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம், நாலுமாவடி புதுவாழ்வுச் சங்கம் ஆகியவை இணைந்து கால்நடை மருத்துவ முகாமை எம்.கல்லத்திக்குளம் கிராமத்தில் நடத்தின.
இந்த முகாமை கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.  துணை இயக்குநர்  எஸ்.அருணாசலகனி, உதவி இயக்குநர்கள் தென்காசி  எஸ்.முருகையா,  அம்பை  ஆபிரகாம் ஜியாபாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர்கள் ஆய்க்குடி  செல்வ குத்தாலிங்கம், ஊத்துமலை ரமேஷ், மாறாந்தை  சந்திரன், வெண்ணிலிங்கபுரம்  ராஜேஷ், நெட்டூர்  ராமசெல்வம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.  கால்நடை  ஆய்வாளர்கள் மகேஷ்,  உச்சிமாகாளி,  கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பால் ராஜ், செய்யது சுலைமான், குமாரசாமி ஆகியோர் மருத்துவ உதவிகள் செய்தனர். 1210 கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை, சினை பரிசோதனை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com