குளத்தில் மூழ்கி தத்தளித்த வியாபாரி சாவு

ஆறுமுகனேரியில் குளத்தில் மூழ்கி தத்தளித்த மாட்டு வியாபாரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

ஆறுமுகனேரியில் குளத்தில் மூழ்கி தத்தளித்த மாட்டு வியாபாரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 
ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (50). இவர் ஆடு, மாடுகள் வாங்கி விற்பனை செய்து வந்தார். 
வெள்ளிக்கிழமை மாலையில் ஆறுமுகனேரி பண்டாரக்குளத்தில் நண்பர்களுடன் குளித்தாராம்.  அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் தத்தளித்துள்ளார். இதையடுத்து மீட்கப்பட்ட இசக்கிமுத்துவை, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.   இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com