கின்ஸ் அகாதெமியில் குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தூத்துக்குடி


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகாதெமியில் சனிக்கிழமை தொடங்கின.
அகாதெமி நிறுவனர் எஸ். பேச்சிமுத்து தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களான முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர் வெ. நாகராஜன், உள்ளாட்சி தணிக்கைத் துறை உதவி ஆய்வாளர் பி. சீனிவாசகுமார் ஆகியோர் வகுப்புகளை தொடங்கிவைத்துப் பேசினர். பயிற்சியின்போது, வாரம் இருமுறை போட்டித் தேர்வு நடத்தப்படும் என்றும், தொடர்ந்து வினாவுக்கான விளக்கமும், விடையும் கொடுத்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் அகாதெமி நிறுவனர் எஸ். பேச்சிமுத்து தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com