குரங்கன்தட்டில் கிராம சபைக் கூட்டம்குரங்கன்தட்டில் கிராம சபைக் கூட்டம்

குரும்பூர் அருகே உள்ள குரங்கன் தட்டு கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் வெள்ளைப்பாண்டி தலைமை வ


குரும்பூர் அருகே உள்ள குரங்கன் தட்டு கிராமத்தில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 
ஊராட்சி செயலர் வெள்ளைப்பாண்டி தலைமை வகித்தார். திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். 
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலர் உமரி சங்கர், ஒன்றியச் செயலர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் நகரச் செயலர் சுடலை, ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலர் நவீன்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.பி. ஜெயசீலன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச் செயலர் காதர், இடையன்விளை ஊராட்சி செயலர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வீரமாணிக்கம் ஊராட்சி செயலர் சுந்தர் தலைமையில் திருமலாபுரத்திலும், மேலப்புதுக்குடி ஊராட்சி செயலர் தலைமையில் மேலப்புதுக்குடியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com